எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எஸ்டெரா பிரோஸ்க்கா எஸ்கோபார்கட்டுரைகள்

ஒப்புரவாகுதலின் கதவு

அயர்லாந்து தேசத்தில், டப்ளின் என்ற இடத்திலுள்ள தூய பேட்ரிக் பேராலயத்தில் ஒரு கதவு உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு கதையை, அது நமக்கு தெரிவிக்கின்றது. 1492ஆம் ஆண்டு, பட்லர் மற்றும் பிட்ஸ்ஜெரால்ட் ஆகிய இரு குடும்பத்தினரும், அவ்விடத்திலுள்ள ஓர் உயர் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அச்சண்டையின் உச்சக்கட்டத்தில், பட்லர் குடும்பத்தினர் பேராலயத்தினுள் அடைக்கலம் புகுந்தனர். சண்டையை விட்டு விட்டு, சமாதானமாகிவிடும் படி கேட்டு, பிட்ஸ்ஜெரால்ட் குடும்பத்தினர் அங்கு வந்தனர். ஆனால் பட்லர்கள் கதவைத் திறக்க அஞ்சினர். பிட்ஸ்ஜெரால்டினர், கதவில் ஒரு துளையிட்டு, அதன் வழியே தம் கரத்தை உள்ளே நீட்டி, சமாதானத்தைக் கேட்டார். எனவே இரு குடும்பத்தினரும் ஒப்புரவாகினர், எதிரிகள் இருவரும் நண்பர்களானார்கள்.

கொரிந்து சபையினருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில் ஒப்புரவாகுதலின் கதவைக் குறித்து எழுதுகின்றார். தேவன் தம்முடைய சொந்த முயற்சியினாலும், அளவற்ற அன்பினாலும் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், பிதாவுக்கும் மனிதனுக்கும் உள்ள உடைந்து போன உறவை, மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். நாம் தேவனை விட்டு மிகவும் தூரமாய் போய் விட்டோம், ஆனால், அவருடைய இரக்கம் நம்மை அங்கேயே விட்டு விடவில்லை. நாம் மீண்டும் அவரோடு ஒப்புரவாகும்படி செய்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்” (2 கொரி. 5:19) தேவனுடைய நீதியை நிறைவேற்ற “பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் ” எனவே இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார்”
(வச. 18, 21).

ஒருமுறை தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக்கொண்ட நாம், இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பினை பெற்றுள்ளோம். அவரை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அன்பின் தேவன் தரும் மன்னிப்பிற்கும், மீட்பிற்கும் நாம் சாட்சிகளாய் இருக்கின்றோம்.

அவர் புயலை அமைதிப்படுத்துகிறார

ஜிம் பதட்டத்துடன், தான் வேலை செய்யும் குழுவினரோடு, தான்  சந்திக்கும் பிரச்சனைகளான பிரிவினைகள், நியாயப்படுத்தும் குணம் மற்றும் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டான். ஒரு மணி நேரம் பொறுமையாக அவனுடைய காரியங்களைக் கேட்ட பின், நான், ‘‘இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென இயேசு விரும்புகிறாரெனக் கேட்ப்போம்” என்று  ஆலோசனைக் கூறினேன் .நாங்கள் அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தோம். அப்பொழுது ஓர் ஆச்சரியமான காரியம் நிகழ்ந்தது. தேவ சமாதானம் எங்களை நிரப்பியதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம். அவருடைய பிரசன்னத்தையும் வழி நடத்துதலையும் உணர்ந்த போது ,அந்தக் கடினமான சூழலில் முன்னேறிச் செல்ல எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.

இயேசுவின் சீடனான பேதுருவுக்கும் தேவனுடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் தேவைப்பட்டது. ஓர் இரவு அவனும் மற்ற சீடர்களும் கலிலேயா கடலில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த போது புயல் வீச ஆரம்பித்தது. அப்பொழுது இயேசு கடல் மேல் நடந்து வந்தார். அது சீடர்களை திகைப்படையச் செய்தது .ஆனால், இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான்,பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:27). உடனே பேதுரு இயேசுவிடம் தானும் அவரோடு நடக்க கட்டளையிடும் என்றான். அவன் படகை விட்டு நீரில் இறங்கி இயேசுவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் தன்னுடைய இலக்கை நோக்குவதை விட்டு விட்டு தான் இருக்கின்ற ஆபத்தையும், மனிதனின் இயலாமையையும் நினைக்க ஆரம்பித்தான், மூழ்கத் தொடங்கினான். ‘‘ஆண்டவரே என்னை ரட்சியும்’’ என்று கூப்பிட்டான். இயேசுவும் அன்போடு அவனைக் காப்பாற்றினார் (வச. 30-31).

பேதுருவைப் போன்று, நம்முடைய வாழ்க்கைப் புயலின் போதும் தேவக் குமாரனாகிய இயேசு நம்முடனேயேயிருக்கிறார் என்பதைக் கற்றுக் கொள்வோம்.

ஒற்றுமை

1722ஆம் ஆண்டு செக்கஸ்லோவேக்கியாவில் வாழ்ந்த ஒரு சிறு கூட்டமான மொரேவியன் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்குத் தப்பி, தயாளகுணம் படைத்த ஒரு ஜெர்மானிய சீமானை அடைந்தனர். நான்கு ஆண்டிற்குள் மேலும் 300 பேர் வந்து சேர்ந்தனர்.  உபத்திரவப் பட்ட இந்த அகதிகள், ஒரே குழுவாகத் தங்கியிருப்பதற்குப் பதிலாக தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தினர்.  கிறிஸ்தவத்தை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பளிக்கப் பட்டது. அது அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர்களனைவரும் எதை ஏற்றுக் கொள்ளவில்லையோ அதை விட்டு விட்டு, எதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதை மட்டுமே முக்கியப் படுத்த ஆரம்பித்தனர். அதன் விளைவாக ஒற்றுமை ஏற்பட்டது.

எபேசு சபை விசுவாசிகளை ஒற்றுமையாக வாழும்படி அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்கப் படுத்துகின்றார். பாவம், எப்பொழுதும் பிரச்சனைகளையும், தன்னலத்தையும், உறவுகளில் விரிசலையும் கொண்டு வரும். கிறிஸ்துவினால் புதிய வாழ்வைப் பெற்றுக் கொண்ட எபேசு சபையினர் தாங்கள் பெற்றுக் கொண்ட புதிய அடையாளத்தை, செயலில் காட்டி வாழும்படி சொல்கின்றார். (எபேசியர் 5:2) எல்லாவற்றிற்கும் மேலாக “சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (4:3) என்கிறார்.

இந்த சமாதானமும் ஒற்றுமையும் மனிதரின் திறமையால் கொண்டு வரக்கூடிய நட்புறவுகள் அல்ல. நாம், “மிகுந்த மனத் தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களால் அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் (வச. 2) இது மனிதனால் கூடாதது. நம்முடைய சொந்த முயற்சியால் நாம் ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. “மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவ வல்லமையின் படியே” இது கூடும் (3:20).

எங்கள் புதிய இல்லம்

1892ஆம் ஆண்டு, அமெரிக்க ஐக்கியநாடுகளில் முதல் குடியுரிமை பெற்று எல்லிஸ் தீவுகளைக் கடந்து சென்று, தான் தங்கப்போகும் புதிய வீட்டினைக் குறித்தும், புதிய ஆரம்பத்தைக் குறித்தும் ஆனிமோர் அதிக உற்சாகத்துடன் இருந்திருப்பார். பல்லாயிரக்கணக்கானோர் அதன் வழியாகக் கடந்து சென்றிருந்தாலும், ஒரு இளம் வாலிபப் பெண்ணாக, அயர்லாந்தில் தன்னுடைய மிகக் கடினமான வாழ்க்கையை விட்டு, புதிய வாழ்க்கைக்காக வெளியேறினாள். ஒரேயொரு கைப்பையைமட்டும் எடுத்துக்கொண்டு தான்வாழப் போகும் இடத்திற்கு, பலவிதக் கனவுகளோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளோடும் வந்து சேர்ந்தாள்.

'ஒரு புதிய வானத்தையும், புதிய பூமியையும்" (வெளி. 21:1) தேவனுடைய பிள்ளைகள் காணும்பொழுது எவ்வளவு உற்சாகமும், பரவசமும் அடைவார்கள். 'பரிசுத்த நகரம், புதிய எருசலேம்" (வச. 2) என வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும் இடத்திற்கு நாம் செல்லுவோம். அப்போஸ்தலனாகிய யோவான் மிகவும் வல்லமையான கற்பனைகளினால் இந்த ஆச்சரியமான இடத்தைக் குறித்து விளக்குகிறார். அங்கே, 'தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை கண்டிருப்போம்.' (வெளி. 22:1). தண்ணீரானது வாழ்க்கையையும், அதன் பூரணத்தையும் குறிக்கும். அதன் காரணர் நித்திய தேவனாவார். யோவான் தொடர்ந்து, 'இனி ஒரு சாபமுமிராது (வச. 3) எனக்கூறுகிறார். அந்த அழகான, பரிசுத்தமான தேவனோடு உள்ள உறவானது, அவருக்கும் மனிதர்களுக்கும் நடுவில் முழுவதுமாக மீட்டுக் கொள்ளப்பட்டது.

தேவன் தான் நேசித்த தன் பிள்ளைகளைத் தன் குமாரனின் ஜீவனின் மூலம் கிரயத்திற்குக்கொண்டு அவர்களுக்காக ஒரு புதிய அதிசயமான வீட்டினை ஆயத்தப்படுத்தி இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய, ஆச்சரியமான, நம்பமுடியாத காரியமாக இருக்கிறதல்லவா? - அவர் அங்கே நம்முடைய தேவனாக நம்மோடு கூட வசிப்பார் (21:3).

நீங்கள் திரும்ப வருவீர்களா?

ரான் மற்றும் நான்சியின் திருமணமானது, நாளுக்கு நாள் வேகமாக முறிந்து கொண்டே வந்தது. அவளுக்கு ஒரு தவறான தொடர்பு இருந்தது. ஆனால் சில காலத்திற்கு பிறகு இந்தப் பாவத்தை தேவனுக்கு முன்பாக ஒத்துக் கொண்டாள். தேவன் அவளை என்ன செய்யச் சொல்கிறார் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அது அவளுக்குக் கடினமாக இருந்தது. உண்மையை அவள் ரானிடம் பகிர்ந்து கொண்டாள். விவாகரத்தினை செய்வதற்கு பதிலாக, ரான் அவளுக்குத் தன்னோடு உண்மையாக மனந்திரும்பி வாழ தன் மனமாற்றத்தை நிரூபிக்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அற்புதமான முறையிலே தேவன் அவர்களின் திருமணத்தை சரிசெய்தார்.

ரானின் நடவடிக்கையானது பாவிகளான நம்மைப் போன்றவர்களின் மேல் தேவன் வைத்த அன்பிற்கும், மன்னிப்பிற்கும் அடையாளமாக இருக்கிறது. தீர்க்கதரிசியான ஓசியா இதை நன்கு அறிந்திருந்தார். அவர் தவறான வாழ்க்கை வாழ்ந்த உண்மையில்லாத ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்படி தேவனால் கட்டளையிடப்படுகிறார். அதன் விளைவாக இஸ்ரவேலர்கள் தனக்கு விரோதமாக எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார் (ஓசியா 1) அதைவிட மிகக் கடினமான காரியம், ஓசியாவின் மனைவி அவனைவிட்டு பிரிந்து போனபின்பு, தேவன் மறுபடியும் அவளை ஓசியாவிடம் திரும்பி வரும்படி சொன்னதுதான். அவர், விபச்சாரியான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் (ஓசியா 3:1) என்று கூறுகிறார். அவர்களுடைய எல்லா கீழ்படியாமைக்கு மத்தியிலும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு நெருக்கமான உறவினை வைத்துக் கொள்ள விரும்புகிறார். எவ்வாறு ஓசியா தன் உண்மையில்லாத மனைவியை நேசித்தாரோ, தேடிச்சென்றாரோ, தியாகம் செய்தாரோ அதைப்போல தேவன் தம் ஜனத்தை நேசித்தார். அவருடைய நீதியான கோபாக்கினையும், அவருடைய வைராக்கியமும் அவருடைய மிகப்பெரிய அன்பினால் ஆட்கொள்ளப்பட்டது.

இதே தேவன் நம்மை அவருக்கு அருகில் வரும்படி விரும்புகிறார். விசுவாசத்தோடு நாம் அவருக்கு அருகில் வருவோமானால், அவருக்குள் நாம் முழுமையடைகிறோம் என்பதை நாம் விசுவாசிக்க முடியும்.

சிறையிருப்பிலும் உண்மை

1948ம் வருடம், ஒருநாள் காலை வேளையில் வீட்டின் அழைப்புமணி ஒலிக்கவே, கதவைத் திறந்த ஹரலன் பாபோவ் என்பவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் வாழ்க்கை ஓட்டம் மாறப்போவதை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை. ஏனென்றால் அங்கு வந்திருந்தது பல்கேரிய காவலர்கள். ஹரலனுடைய விசுவாசத்தின் நிமித்தம் அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தார்கள். அதன்பிறகு பதின்மூன்று வருடங்கள் சிறையில் கழித்தார், தனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தரும்படி தேவனிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தார். சிறையில் கொடுமை அனுபவித்தார். ஆனாலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற நிச்சயம் இருந்தது. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை சகக்கைதிகளிடம் பகிர்ந்துகொண்டார். அநேகர் விசுவாசித்தார்கள்.

இதே கதைதான் யோசேப்புக்கும். கோபங்கொண்ட தன் சகோதரர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி தன்னை எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்றபோது, தன் வாழ்க்கை ஓட்டம் எப்படி இருக்குமென அவருக்கும் தெரியவில்லை. அந்த வியாபாரிகள் யோசேப்பை போத்திபார் என்கிற ஓர் எகிப்திய அதிகாரியிடம் விற்றார்கள். பலதெய்வ நம்பிக்கையுடைய மக்கள்  வாழ்ந்துவந்த ஒரு கலாச்சாரத்தில் வாழவேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு, போத்திபாரின் மனைவி யோசேப்பை மயக்கப்  பார்க்கிறாள். எவ்வளவோ முயன்றும் யோசேப்பு இடம் கொடுக்கவே இல்லை. உடனே பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்துகிறாள். அதனால் சிறையில் அடைக்கப்படுகிறார் யோசேப்பு. ஆதியாகமம் 39:16-20. ஆனாலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. யோசேப்போடே தேவன் இருந்தார். அதுமட்டுமல்ல, “அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணி(னார்).” மேலும், அதிகாரிகளின் “தயவு கிடைக்கும்படி செய்தார்” (39:3,21).

யோசேப்பு எவ்வளவு பயத்தில் இருந்திருப்பார் என்று சொல்லவேண்டியதில்லை!  ஆனாலும் உண்மையோடிருந்தார், ஒழுக்கம் தவறவில்லை. அந்த இக்கட்டான பயணத்தில் யோசேப்போடே தேவன் இருந்தார், யோசேப்புக்கு ஒரு மகத்தான திட்டத்தையும் வைத்திருந்தார். உங்களைக் குறித்தும் அவருக்கு ஒரு திட்டம் உண்டு. தைரியமாக இருங்கள், விசுவாசத்தோடு நடந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், எல்லாம் அவருக்குத் தெரியும் என்று நம்புங்கள்.

சாதாரண நாடோடி வாலிபன்

1877ம் வருடத்தில் ஒருநாள் ஆலய ஆராதனையின்போது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் முன்னால் வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டது. ராட்னி ஸ்மித் என்கிற வாலிபர் முன்னே சென்றபோது “இவன் ஒரு நாடோடி” என்று யாரோ ஏளனமாக முணுமுணுத்தது அவர் காதில் விழுந்தது. ராட்னியின் பெற்றோரும் கல்வியறிவற்ற நாடோடிகள் தாம்; இந்த வாலிபர் பற்றி யாருமே பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தன்னைக் குறித்து தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டென்பதை ராட்னி நிச்சயமாக அறிந்திருந்தார். ஒரு வேதாகமத்தையும் ஆங்கில அகராதியையும் வாங்கி, வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.  “இயேசுவிடம் செல்வதற்கான வழி கேம்பிரிட்ஜிலும், ஹார்வர்டிலும், யேலிலிலும் அல்லது கவிதைகளிலும் இல்லை. கல்வாரி என்கிற முற்கால  மலையில்தான் உள்ளது” என்று இவர் ஒருமுறை சொன்னார். எல்லா தடைகளையும் தாண்டி, ஒரு சுவிசேஷகரானார் ராட்னி; அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார்.

பேதுருவும் சாதாரண ஒரு மனிதர்தான். ரபிமார்களின் மதப்பள்ளியில் படித்தவரல்ல (அப் 4:13), கலிலேயாவைச் சேர்ந்த ஒரு மீனவர். அந்த நிலையில்தான் “என் பின்னே வாருங்கள்” என்று இயேசு அழைத்தார். மத் 4:19. பேதுருவின் வளர்ப்பும், வழி நெடுகிலும் அவர் சந்தித்த தோல்விகளும் ஒரு புறம் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பற்றி “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” என்று பின்னர் அவர் உறுதியாகக் கூறமுடிந்தது. 1பேதுரு 2:9.

கல்வி, வளர்ப்பு, பாலினம் அல்லது இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து இயேசுவின் மூலம் அனைவருமே தேவனுடைய குடும்பத்தில் சேரமுடியும், அவரால் பயன்படுத்தப்பட முடியும். இயேசுவை விசுவாசிக்கிற அனைவருமே “அவருடைய சொந்த ஜனமாக” மாறலாம்.

சொல்ல வேண்டிய நற்செய்தி

“உன்னுடைய பெயரென்ன?” அர்மான் என்ற ஈரானிய மாணவன் கேட்டான். நான் அவனிடம் என் பெயர் எஸ்டரா என்றேன். அவன் முகமலர்ச்சியோடு, “எங்களுடைய பெர்சியாவிலும் இத்தகைய ஒரு பெயருண்டு. அது ஸெட்டரே” என்றான். இந்த ஒரு சிறிய தொடர்பு ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவகுத்தது. நான் அவனிடம் வேதாகமத்திலுள்ள ஒரு நபர் எஸ்தர். அவள் பெர்சியாவிலிருந்த ஒரு யூத அரசி (தற்சமயம் ஈரான்) அவளுடைய கதையில் ஆரம்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி வரைக்கும் அவனுக்குச் சொன்னேன். எங்களுடைய உரையாடலின் விளைவாக அர்மான் எங்களுடைய வாரந்திர வேதாகம பாட வகுப்பிலும் கலந்து கொண்டு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள முற்பட்டான்.

இயேசுவின் சீடனான பிலிப்பு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, ரதத்தில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரியிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது, அது ஓர் உரையாடலுக்கு வழிவகுத்தது. “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” (அப். 8:30) என்று கேட்டான். அந்த எத்தியோப்பியன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கான அர்த்தம் விளங்கவில்லை. அப்பொழுது பிலிப்புவினுடைய கேள்வி சரியான நேரத்தில் வந்தது. அவன் உடனே பிலிப்புவை தன்னுடனே ரதத்தில் அமருமாறு அழைக்கின்றான். தாழ்மையோடு கவனிக்கின்றான். இது எத்தனை ஆச்சரியமான வாய்ப்பு என்பதை பிலிப்பு உணர்ந்துகொண்டு, பேசத் தொடங்கி இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான் (வச. 35).

பிலிப்புவைப் போன்று நாமும் நற்செய்தியைச் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம். நாம் வேலை செய்யுமிடத்தில், கடைகளில் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நபர்கள், இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படவும் நம்மை வழிநடத்தவும் தேவையான வார்த்தைகளை நமக்குத் தரவும் நாம் வேண்டுவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும், நாம் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.